தமிழ் அரசியல் கைதிகளை ஏன் விடுவிக்கக்கூடாது? - தமிழருக்கு ஒரு நீதி, மற்றவருக்கு ஒரு நீதியா?- சிவாஜிலிங்கம்

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையில், இலங்கை அரசு கவனம் செலுத்த வேண்டும் என வடமாகாண முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம் கோரியுள்ளார்.

Update: 2020-11-12 05:55 GMT
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையில், இலங்கை அரசு கவனம் செலுத்த வேண்டும் என வடமாகாண முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம் கோரியுள்ளார். முன்னாள் எம்.பி. பரராஜசிங்கம் கொலையில், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் சிறையில் இருக்கும் பிள்ளையான், போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டு, மட்டக்களப்பில் உள்ள வளர்ச்சி திட்ட அலுவலகத்தை திறந்துவைத்தார். இதைச் சுட்டிக்காட்டி, யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சிவாஜிலிங்கம், இந்த அரசால்,  ஏன் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடியாது என கேள்வி எழுப்பினார். 
Tags:    

மேலும் செய்திகள்