கொரோனா அச்சம் - ஊரடங்கு அமல்படுத்திய வட கொரியா

வட கொரியாவில் கொரோனா தொற்று இல்லை என அந்த நாடு கூறி வந்த நிலையில், தற்போது ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தி உள்ளது.

Update: 2020-07-26 06:13 GMT
வட கொரியாவில் கொரோனா தொற்று இல்லை என அந்த நாடு கூறி வந்த நிலையில், தற்போது ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தி உள்ளது.  உலகம் முழுவதும் கொரோனா தொற்று அச்சம் ஏற்பட்ட நிலையில், வட கொரியா தனது எல்லையை முழுமையாக முடக்கி வைத்திருந்தது. இந்த நிலையில், தென் கொரியாவில் இருந்து, சட்ட விரோதமாக நுழைந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தொற்று பரவலை தடுக்கும் விதமாக வடகொரியாவில், ஊரடங்கு ஊத்தரவு கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags:    

மேலும் செய்திகள்