சுறாவிடம் இருந்து தப்பிய சுற்றுலா பயணி - பெல்ஸ் கடற்கரையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
ஆஸ்திரேலியாவில் உள்ள கடலில் சுறாவிடம் இருந்து பிரெஞ்சு சுற்றுலாப் பயணி ஒருவர் உயிர் தப்பியுள்ளார்.
விக்டோரியாவில் உள்ள பெல்ஸ் கடற்கரையில் டிலான் நாகஸ் என்ற சுற்றுலா பயணி, அலைச்சறுக்கில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென வந்த சுறா ஒன்று, இரண்டு முறை தாக்கியதாக அவர் கூறியுள்ளார். இந்த அதிர்ச்சி காட்சிகளை ஒருவர் படம் பிடித்த நிலையில், அது வெளியாகியுள்ளது.