இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு 15 ஐ.எஸ்.தீவிரவாதிகள் ஊடுருவிய தகவல் உண்மையில்லை - இலங்கை கடற்படை மறுப்பு

இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் 15 பேர் கடல் வழியாக தப்பி சென்றதாக வெளியான தகவலை இலங்கை கடற்படை மறுத்துள்ளது

Update: 2019-05-28 12:11 GMT
இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் 15 பேர் கடல் வழியாக தப்பி சென்றதாக வெளியான தகவலை இலங்கை கடற்படை மறுத்துள்ளது. இந்தச் செய்தியில் எந்தவொரு உண்மையும் கிடையாது என இலங்கை கடற்படையின் லெப்டினன்ட் கமாண்டர் இசுறு சூரிய பண்டார தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறும்போது, கடற்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும், ஐ.எஸ். தீவிரவாதிகள் தப்பிச் சென்றதாக கூறப்படும் தகவலையும் அலட்சியம் செய்ய மாட்டோம் என்றும் அவர் கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்