குண்டு வெடிப்பு நிகழ்ந்த தேவாலயத்தில் அதிபர் சிறிசேனா - காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல்
இலங்கையின், கொழும்பு நகரில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த புனித செபஸ்டியர் தேவாலயத்திற்கு, அந்நாட்டு அதிபர் மைத்திரி பால சிறிசேனா நேரில் சென்று பார்வையிட்டார்.
மத போதகர் ஸ்ரீலால் பொன்சேகாவை சந்தித்த அனுதாபங்களை தெரிவித்த அவர் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார். குண்டு வெடிப்பால் சேதமடைந்த தேவாலய கட்டடத்தை, புதுப்பிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ராணுவத்தினரை, சிறிசேனா அறிவுறுத்தினார்.