கனமழை, வெள்ளப்பெருக்கு- 50 பேர் பலி

தென் அமெரிக்க நாடான பெருவில் கடந்த சில வாரங்களாக இடைவிடாமல் பெய்து வரும் கனமழை, வெள்ள பாதிப்பில் சிக்கி 50 பேர் உயிரிழந்தனர்.

Update: 2019-02-27 03:42 GMT
தென் அமெரிக்க நாடான பெருவில் கடந்த சில வாரங்களாக இடைவிடாமல் பெய்து வரும் கனமழை, வெள்ள பாதிப்பில் சிக்கி 50 பேர் உயிரிழந்தனர். சிக்லாயோ, பாகுவா உள்ளிட்ட நகரங்களில் பாலங்கள், பள்ளிக்கூடங்கள், வீடுகள் வெள்ளத்தில் தரைமட்டமாகின. சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உணவு மற்றும் குடிநீர் வழங்க பெரு அரசு ஏற்பாடு செய்துள்ளது. தொடர் கனமழை, வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்