தமிழரசு கட்சியில் இருந்து சி.வி.விக்னேஸ்வரன் நீக்கம்
இலங்கை வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் புதிய கட்சியை தொடங்கி உள்ளதால், தமிழரசு கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
இலங்கை வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் புதிய கட்சியை தொடங்கி உள்ளதால், தமிழரசு கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். மேலும், விக்னேஸ்வரன், தமிழரசு கட்சியில் இருந்து தாமாகவே விலகியதாக கருதப்படுவார் எனவும் மாவை சேனாதிராஜா கூறினார். வடக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்காலம் நிறைவடைந்த பின்னர், தமிழ் மக்கள் கூட்டணி என்ற புதிய கட்சியை சி.வி.விக்னேஸ்வரன் அண்மையில் துவக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.