பம்பலப்பிட்டி கதிரேசன் ஆலயத்தில் சிறப்பு பூஜை : புதிய பிரதமர் ராஜபக்சே பங்கேற்பு

இலங்கையில் உள்ள பம்பலப்பிட்டி கதிரேஷன் ஆலயத்தில் நடந்த சிறப்பு பூஜையில், இலங்கை புதிய பிரதமர் ராஜபக்சேவும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2018-11-03 23:02 GMT
இலங்கையில் உள்ள பம்பலப்பிட்டி கதிரேஷன் ஆலயத்தில் நடந்த சிறப்பு பூஜையில், இலங்கை புதிய பிரதமர் ராஜபக்சேவும்,  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து. இந்து மத அலுவல்கள் துறை அமைச்சர் என்ற வகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  இந்துமத அமைச்சரக பணியாளர்  சபை உறுப்பினர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். முந்தைய  அரசில் முன்னெடுக்கப்பட்ட வேலைகள்,  அதன் முன்னேற்றங்கள் தொடர்பாக கேட்டறிந்ததுடன், புதிதாக முன்னெடுக்க வேண்டிய பணிகள் தொடர்பாக அதிகாரிகளுக்கு டக்ளஸ் தேவானந்தா ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்