யாழ் நூலகத்திற்கு 50000 புத்தகங்கள் : அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்

இலங்கை யாழ் நூலகத்திற்கு தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் 50 ஆயிரம் புத்தகங்களை வழங்கினார்.

Update: 2018-09-18 12:01 GMT
இலங்கை யாழ் நூலகத்திற்கு தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் 50 ஆயிரம் புத்தகங்களை வழங்கினார். 85 பாடசாலைகளுக்கு தேவையான நூல்களை வாங்குவதற்கான காசோலையையும் வழங்கினார். முன்னதாக யாழ்ப்பாணத்திற்கு வருகை புரிந்த அமைச்சர் செங்கோட்டையனை பள்ளி மாணவர்கள் வரவேற்றனர். 

இதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் இந்தியா மற்றும் இலங்கையின் மாநகர சபையின் கொடி ஏற்றப்பட்டு இரு நாட்டு தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டன. தொடர்ந்து புத்தகங்கள் அளிக்கும் நிகழ்ச்சி ஆரம்பமானது.

நிகழ்ச்சியில் இந்திய தூதர் பாலச்சந்திரன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா மற்றும் தர்மலிங்கம் சித்தார்த்தன், கல்வி அமைச்சர் ராதாகிருஷ்ணன், வடமாகாண ஆளுநர் ஆகியோர் கலந்து கொண்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்