சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் : அதிபர் மைத்திரிபால சிறிசேனா பங்கேற்பு

இலங்கையின் ரத்தினபுரியில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயற்குழு கூட்டத்தில் அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா பங்கேற்று பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Update: 2018-09-10 04:41 GMT
இலங்கையின் ரத்தினபுரியில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயற்குழு கூட்டத்தில் அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா பங்கேற்று பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் விழாவில் பேசிய அவர், உள்நாட்டுப் போர் முடிவடைந்த பிறகு, இலங்கைக்கு வந்த ஐ.நா. அதிகாரிகளை, பொதுமக்கள் சந்திக்க விடாமல் தடுத்தது உள்ளிட்ட 2 அறிக்கைகள், மனித உரிமை ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக கூறினார்.  இலங்கைக்கு எதிரான அறிக்கைகளால், நெருக்கடி உண்டாகும், என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அந்நாட்டு அதிபர் இது குறித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்