ஒரே பிரசவத்தில் பிறந்த 3 பாண்டா கரடிகள் : 4 வது பிறந்தநாள் கொண்டாட்டம் கோலாகலம்

சீனாவில் குவாங்டாங் மாகாணத்தில் ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று பாண்டா கரடிகளின் 4 வது பிறந்த நாள் கொண்டாட்டம் அனைவரையும் கவர்ந்தது.

Update: 2018-07-30 06:09 GMT
சீனாவில் குவாங்டாங் மாகாணத்தில் ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று பாண்டா கரடிகளின் 4 வது பிறந்த நாள் கொண்டாட்டம் அனைவரையும் கவர்ந்தது. குவாங்ஜோ நகரில் உள்ள சிமிலாங் விலங்கியல் பூங்காவில் பாண்டா கரடிகளின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பாண்டா கரடிகளுக்கு மிகவும் பிடித்த ஆப்பிள், கேரட் மற்றும் மூங்கில் இலை, தண்டுகள் கொண்டு கேக் தயாரிக்கப்பட்டது. கேக்கை சாப்பிட்ட பிறகு, ஐஸ் கட்டிகள் மீது பாண்டா கரடிகள் உருண்டு புரண்டதை மக்கள் ரசித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்