சீனாவில் கனமழை - மஞ்சள் நதியில் வெள்ளப்பெருக்கு

ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரை, கடலுக்கு திருப்பிவிட்டதன் மூலம் உயிர் சேதங்கள் தடுக்கப்பட்டுள்ளன.

Update: 2018-07-16 06:03 GMT
சீனாவில் சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அந்நாட்டின் இரண்டாவது மிக பெரிய நதியான மஞ்சள் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் ஆங்காங்கே காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.. இதனால் எவ்வித சேதமும் ஏற்படாமல் இருக்க வெள்ளக் கட்டுப்பாடு மற்றும் வறட்சி நிவாரண  துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரை, கடலுக்கு திருப்பிவிட்டதன் மூலம் உயிர் சேதங்கள் தடுக்கப்பட்டுள்ளன.
Tags:    

மேலும் செய்திகள்