தமிழகத்திற்கு மார்ச் 27 வரை கெடு.. தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

Update: 2024-03-21 08:03 GMT

தமிழ்நாட்டில் புதுப்பிக்கப்பட வாக்காளர் பட்டியலை வருகிற 27ஆம் தேதி இறுதி செய்ய வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஜனவரி ஒன்றாம் தேதியை தகுதி ஏற்பு நாளாக கொண்டு, வாக்காளர் பட்டியலை புதுப்பித்து வேட்புமனு தாக்கலின் கடைசி நாளில் இறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இறுதி வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் எனவும், இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்