சத்துணவு சாப்பிட்ட 19 பள்ளி மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

Update: 2024-01-30 09:23 GMT

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள சோழங்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 19 பள்ளி மாணவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. மதிய உணவு சாப்பிட்டு, மாலை வீடு திரும்பியவுடன், ஒருவர் பின் ஒருவராக பாதிக்கப்பட்ட நிலையில், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்