தகாத உறவில் மனைவி.. தட்டி கேட்ட கணவன் கொலை - கள்ளகாதலனுக்கு நீதிமன்றம் வைத்த ஆப்பு

Update: 2024-03-26 14:49 GMT

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை அடுத்து உள்ள சத்திரம்புளியங்குளத்தை சேர்ந்த ராஜா - முத்துலெட்சுமி தம்பதிக்கு கடந்த 2008 ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ராஜா வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துபோது, அவரது மனைவிக்கும், மணிகண்டன் என்பவருக்கும் தகாத உறவு ஏற்பட்டது. இதனையறிந்து ஊர் திரும்பிய ராஜா, இருவரையும் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன், கடந்த 2016ம் ஆண்டு ராஜாவை கொலை செய்தார். இந்த சம்பவத்தில், மணிகண்டன், முத்துலெட்சுமி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், மணிகண்டனுக்கு ஆயுள் தண்டனையும், முத்துலெட்சுமிக்கு 2 ஆண்டு சிறைத் தண்டையும், விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Tags:    

மேலும் செய்திகள்