வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகார் - அதிரடி காட்டிய விஜிலென்ஸ்

Update: 2024-03-28 17:03 GMT

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில், ஸ்ரீவில்லிபுத்தூர் சார்-பதிவாளர் வீட்டை லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மதிப்பீடு செய்தனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் சார்-பதிவாளராக பணியாற்றி வரும் முத்துசாமி, இதற்கு முன்பு விருதுநகர் மாவட்டத்தில் சார்-பதிவாளராக பணியாற்றியிருந்த நிலையில், இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள வன்னியம்பட்டியில் முத்துச்சாமி புதிதாக கட்டி வரும் வீட்டை, லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மதிப்பீடு செய்தனர்

Tags:    

மேலும் செய்திகள்