பெண் குழந்தைகளிடம் நைசாக பேசி சாக்கு பையை வைத்து கடத்த முயன்ற ஜோடி - விருதுநகரில் பயங்கரம்

Update: 2023-12-12 14:17 GMT

சின்ன கட்டங்குடி கிராமத்தில் அமைந்துள்ள தொடக்கப்பள்ளியில் இன்று காலை 9 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த ஆணும், பெண்ணும் அப்பகுதியில் இருப்பவர்களுக்கு பத்திரிக்கை கொடுப்பது போல் நடமாடி வந்துள்ளனர்... அந்த தொடக்கப் பள்ளி அருகே வந்தவுடன் அங்கு விளையாடிக் கொண்டிருந்த 2 பெண் குழந்தைகளுடன் பேசிக் கொண்டிருந்த நிலையில், பின்பு அவர்கள் மறைத்து வைத்திருந்த சாக்குப் பையைப் போட்டு கடத்த முயலும்போது உடனடியாக குழந்தைகள் கத்திக் கூச்சலிட்டுள்ளனர்... சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓடி வந்த போது அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பியுள்ளனர்... இச்சம்பவம் குறித்து காவல்துறையிடம் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்... இச்சம்பவத்தால் அச்சம் அடைந்த பொதுமக்கள் பள்ளி உள்ள பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்