குட்டையில் மிதந்த இளைஞர் உடல்... 2 குழந்தைகளின் தாயால் நேர்ந்த நிலை..? தோண்ட தோண்ட வெளியான தகவல்

Update: 2024-03-20 16:47 GMT

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில், மனைவியுடன் தகாத உறவில் இருந்த இளைஞரை, கணவர் கொன்று குட்டைக்குள் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மரக்காணம் அடுத்த பெருமுக்கல் காமாட்சியம்மன் கோவில் குட்டையில், கல்லுக்கடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த டிப்பர் லாரி ஓட்டுநரான மணியரசு என்பது தெரியவர, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், மணியரசுவிற்கும் அதே பகுதியை சேர்ந்த வெண்ணிலா என்ற திருமணமான பெண் ஒருவருக்கும் தகாத உறவு இருந்து வந்தது தெரியவந்தது. இதில், வெண்ணிலாவிற்கு இரு குழந்தைகள் உள்ள நிலையில், சில நாட்களுக்கு முன்பாக கணவரை பிரிந்த அவர் மணியரசுவுடன் திருவண்ணாமலையில் சென்று குடும்பம் நடத்தி வந்திருக்கிறார். இது குறித்து வெண்ணிலாவின் கணவர் அன்பு போலீசில் புகாரளித்த நிலையில், இருவரையும் மீட்டு காவல்நிலையம் அழைத்து வந்த போலீசார், வெண்ணிலாவை அவரது கணவருடன் அனுப்பி வைத்திருக்கின்றனர். இந்நிலையில், பெருமுக்கல் கிராமத்தை விட்டு வெளியேறி வந்தவாசியில் வாடகைக்கு வீடு எடுத்து அன்பு தங்கிய நிலையில், அங்கும் வந்து தன் மனைவியுடன் மணியரசு பழகுவதை கண்டு ஆத்திரமடைந்த அன்பு, மணியரசுவை நோட்டமிட்டு கொன்று குட்டைக்குள் வீசியது தெரியவர அவரை போலீசார் கைது செய்து சிறையி

Tags:    

மேலும் செய்திகள்