"வீதிகளில் உலா வரும் சிறுத்தை வீடியோ"வதந்தி பரப்பிய வடமாநில தொழிலாளர்கள்.. தட்டி தூக்கிய போலீஸ்..

Update: 2024-01-12 09:06 GMT

நீலகிரி மாவட்டம் உதகை அருகே தேவாலாவில் புலி மற்றும் சிறுத்தை நடமாட்டம் குறித்து சித்தரித்த புகைப்படத்தை வெளியிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான யூசுப் அலி, முகைத் அலி ஆகிய இருவர் வடமாநில தொழிலாளர்கள், மற்றொருவர் அத்திகுன்னாவை சேர்ந்த ராஜ்குமார் என போலீசார் தெரிவித்துள்ளனர். வேறு பகுதியில் நடமாடிய சிறுத்தை, புலிகள் காட்சியை சமூக வலைதளத்தில் பரப்பியதால் இந்த நடவடிக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்