நடராஜர் கோயிலில் சாமி தரிசனம் செய்த குடியரசு துணைத் தலைவர்

Update: 2024-01-29 14:49 GMT

உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில், குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். அரசு முறை பயணமாக புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு வந்த குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், சிதம்பரம் நடராஜர் கோவில் மற்றும் பரங்கிப்பேட்டை பாபாஜி கோவிலில் சிறப்பு தரிசனம் செய்தார். சிதம்பரம் கோவிலில் அவருக்கு பொது தீட்சிதர்கள் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஹெலிகாப்டர்கள் மூலம் குடும்பத்தோடு சென்னை புறப்பட்டு சென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்