அப்பாவை இழந்த ஒன்றரை வயது குழந்த.. குண்டு வெடித்து உடல் சிதறி பலியான மகன்.. நெஞ்சை அடைத்த துக்கத்தோடு கோரிக்கை வைத்த தந்தை

Update: 2024-02-01 06:21 GMT

நக்சல் தாக்குதலில் பலியான, தமிழகத்தை சேர்ந்த சி.ஆர்.பி.எஃப் வீரரின் உடல் இன்று சொந்த ஊருக்கு எடுத்துவரப்படவுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் பகுதியில், கடந்த 30ஆம் தேதி நக்சலைட்டுகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், மூன்று சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இதில் குடியாத்தம் அடுத்த கணவாய்மோட்டூர் பகுதியை சேர்ந்த தேவன் என்பவரும் ஒருவர். தேவனின் உடல் இன்று அவரது சொந்த கிராமத்திற்கு கொண்டு வரப்படவுள்ளது. உயிரிழந்த சி.ஆர்.பி.எஃப் வீரர் தேவனுக்கு, திருமணம் ஆகி 3 ஆண்டுகளே ஆன நிலையில், ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில், தேவனின் மனைவிக்கு, அரசு வேலை வழங்குமாறு, தேவனின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்