"வீரத்தியாகி சங்கரய்யா" - ஈ.பி.எஸ். இரங்கல்

Update: 2023-11-15 11:59 GMT

இந்திய பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவர் சங்கரய்யா காலமான செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நூற்றாண்டு கண்ட சுதந்திர போராட்ட வீரர் சங்கரய்யா மறைவையொட்டி, அவரது குடும்பத்தினருக்கும், கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். தன்வாழ்நாளின் பெரும் பகுதியை மக்கள் சேவையிலும், பாட்டாளிகளின் மேம்பாட்டிற்காகவும் அர்ப்பணித்த வீரத்தியாகி சங்கரய்யாவின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்