காதலர் தினம்.. பரபரப்பான கண்ணகி சிலை.. மெரினாவில் குவிந்த போலீஸ்

Update: 2024-02-14 07:47 GMT

காதலர் தினமானது இன்று நாடு முழுவதும் கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் காதலர் தினத்திற்கு எதிர்க்கும் விதமாக இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் மெரினா கடற்கரைக்கு வந்து போராட்டம் நடத்துவது வழக்கம். அதே போல இந்தாண்டும் காதலர் தினத்தன்று இந்து மக்கள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் கணபதி தலைமையிலான நிர்வாகிகள் கண்ணகி சிலைக்கு மாலை அணிவித்து, காதலர் தினத்திற்கு எதிராக கோஷமிட திட்டமிட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானது.

அதனடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெரினாவில் அமைந்துள்ள கண்ணகி சிலை அருகே உதவி ஆணையர் தலைமையில் மூன்று இன்ஸ்பெக்டர்கள் என மொத்தம் 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மெரினா கடற்கரைக்கு வரும் காதலர்களுக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இருக்கக்கூடாது என்ற அடிப்படையில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 11மணியளவில் இந்து மக்கள் கட்சியினர் கண்ணகி சிலைக்கு மாலை அணிவிக்க வர உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்