துடிதுடிக்க கொல்லப்பட்ட திருநம்பி... கிணற்றின் அருகே சாம்பலாக கிடந்த உடல் - அதிர்ச்சி பின்னணி

Update: 2023-12-22 03:35 GMT

பச்சகவுண்டம்பாளையம் கிராமத்தில் வசித்து வந்தவர் தேனியைச் சேர்ந்த கவி என்ற திருநம்பி. சொட்டுநீர் பாசனம் அமைக்கும் பணிக்காக, ஒப்பந்த தொழிலாளராக பணியாற்றி வந்தார். கடந்த ஜனவரி மாதம், திருநம்பி கவி மாயமான நிலையில், அவருடன் அறையில் தங்கி இருந்த வைதேகி என்பவர் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே, கவி பணியாற்றி வந்த நிறுவனத்தின் உரிமையாளரான ராதாகிருஷ்ணன் தலைமறைவானதை அடுத்து, 11 மாதங்களுக்குப் பிறகு அவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், மனைவி இல்லாத தனது அண்ணன் சந்திரசேகரனுக்கு, வைதேகியை திருமணம் செய்துவைக்க நினைத்ததாகவும், அதற்கு இடையூறாக இருந்த திருநம்பி கவியை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ததும் தெரியவந்தது. பின்னர் அவரது உடலை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று, திருப்பூரில் உள்ள தோட்டத்து கிணறு அருகே எரித்து சாம்பலாக்கியதும், அதனை வாய்க்காலில் கரைத்ததும் வாக்குமூலம் அளித்தது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது

Tags:    

மேலும் செய்திகள்