பள்ளி அருகே மைதானத்தில் கிடந்த சடலம்... பீர் பாட்டிலால் கூறுபோட்ட கொடூரம்... அதிர்ந்த கோவில்பட்டி

Update: 2024-05-10 12:18 GMT

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் முன் விரோதம் காரணமாக ஒருவர் பீர் பாட்டிலால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... முத்துப்பாண்டி பெயிண்டிங் காண்ட்ராக்டராக இருந்து வந்த நிலையில், வீரவாஞ்சி நகரில் தனியார் பள்ளியின் எதிரே உள்ள மைதானத்தில் பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்டு சடலமாகக் கிடந்துள்ளார்... போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் முத்துப்பாண்டிக்கும் பாரதி நகரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் முன் விரோதம் இருந்த நிலையில், மணிகண்டன் பீர் பாட்டிலால் குத்திப் படுகொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் தப்பியோடிய குற்றவாளியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்