கோவில் இடத்தை ஆக்கிரமித்த நபர்..! தட்டிக்கேட்ட கவுன்சிலருக்கு நேர்ந்த கொடூரம்.. வெளியான அதிர்ச்சி வீடியோ.. திருப்பத்தூரில் பரபரப்பு

Update: 2024-03-30 02:24 GMT

கோயில் இடத்தை ஆக்கிரமித்ததை தட்டிக்கேட்ட கவுன்சிலரை தாக்கியது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம், தோப்பளகுண்டா பகுதியில் நொண்டி மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு திருவிழா நடத்துவது தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, கோயில் நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ள சின்ராஜிடம் அப்புறபடுத்துமாறு, தோப்புளகுண்டா கவுன்சிலர் சந்தோஷ் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சின்ராஜ், அவரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வேகமாக பரவின. இந்த நிலையில் தாக்குதல் தொடர்பாக கவுன்சிலர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்