பல கிமீ தூரத்திற்கு ஆயிரக்கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்... அதிர்ச்சியில் மீனவர்கள்

Update: 2023-12-10 10:45 GMT

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கடற்கரை பகுதியில், பல கிலோமீட்டர் தூரத்திற்கு செத்து மிதக்கும் மீன்களை அகற்ற மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 2 நாட்களாக மரக்காணம் பகுதியில் உள்ள முகத்துவாரத்தில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரத்திற்கு, பக்கிங்காம் கால்வாயில் வாழக்கூடிய ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து கடற்கரையோரம் ஒதுங்கியுள்ளன. மீன்கள் அழுகி துர்நாற்றம் வீசுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கும் நிலை உள்ளதாகவும், மீன்களை உடனடியாக அகற்றி பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வேண்டும் என்றும் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்