திருச்செந்தூர் அருகே அதிர்ச்சி சம்பவம்

Update: 2024-04-22 09:00 GMT

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே, இலங்கைக்கு கடத்த முயன்ற 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். காயல்பட்டினம் ஓடக்கரை கடற்கரையிலிருந்து பீடி இலைகள் படகுகள் மூலம் இலங்கைக்கு கடத்த இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு போலீசார் விரைந்து சென்றபோது, படகில் பீடி இலைகளை கும்பல் ஒன்று ஏற்றிக் கொண்டிருந்தது தெரியவந்தது. போலீசாரைக் கண்டதும் அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பிய நிலையில், 80 மூட்டை பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக துரை என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்