``சாதி ரீதியாக செயல்படும் தேவர்குளம் போலீஸ்..?'' எனக்கூறி கொந்தளித்த சிறுவன் உட்பட 35 பேர் கைது

Update: 2024-05-09 09:18 GMT

நெல்லை மாவட்டம் வன்னிக்கோனேந்தல் அருகே போலீசார் சாதிய ரீதியாக செயல்படுவதாக கூறி போராடியவர்கள் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

தேவர்குளம் போலீசார் சாதிய ரீதியாக செயல்படுவதாக கூறி நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக 6 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பி எம் டி மக்கள் கழக நிர்வாகி இசக்கி ராஜா, ஒரு சிறுவன் உள்பட 35 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைதானவர்களின் 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், எஞ்சிய 33 பேர் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கைதான சிறுவன் மட்டும், கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளான். 

Tags:    

மேலும் செய்திகள்