ஓட ஓட விரட்டி இளைஞர் வெட்டி படுகொலை... சிக்கிய பிரதர்ஸ்

Update: 2024-03-03 04:37 GMT

திருமுடிவாக்கம் கம்பர் தெருவை சேர்ந்த நிஷாந்த் லோடு வேன் ஓட்டி வந்தார். கடந்த புதன் கிழமை வீட்டின் அருகே அமர்ந்து செல்போனில் விளையாடி கொண்டிருந்த அவரை, மர்ம நபர்கள் ஓட, ஓட விரட்டி படுகொலை செய்தனர். இந்த சம்பவம் குறித்து குன்றத்தூர் போலீசார் தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், கொலை சம்பவத்தில் ஈடுபட்டது அதே பகுதியை சேர்ந்த அஜித், அவரது தம்பி கவியரசு உள்ளிட்ட 6 பேரை மாமல்லபுரத்தில் சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர். விசாரணையில், முன்பகை காரணமாக இந்த கொலை சம்பவம் நடைபெற்றதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது

Tags:    

மேலும் செய்திகள்