நடுரோட்டில் உயிரை எடுக்க வந்த எமன்..ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பித்த பெண்கள்.."விட்ருந்தா அவ்ளோ தான்"

Update: 2023-11-17 07:26 GMT

குஜராத்தில் இருந்து கண்ணாடி தொழிற்சாலைக்கு தேவையான வேதிப் பொருட்களுடன் வந்து, ஸ்ரீபெரும்புதூரில் சரக்கை இறக்கி விட்டு மீண்டும் அந்த லாரி குஜராத்தை நோக்கி புறப்பட்டது... குஜராத்தைச் சேர்ந்த விஷால் என்பவர் வாகனத்தை ஓட்டி வந்த நிலையில், நெமிலிச்சேரி அருகே பாலவேடு சுங்கச்சாவடி முன்பாக பரபரப்பான போக்குவரத்து பொழுதில், திடீரென லாரியின் இடது பக்க டயர் கழன்று அதிவேகமாக சாலையில் பாய்ந்து ஓடியது... லாரியை விஷால் பாதுகாப்பாக ஓரங்கட்டினார்... ஒரு நொடி இதயத் துடிப்பையே நிறுத்தி விடும் அளவுக்கு பதைபதைப்பூட்டும் வண்ணம் சாலை ஓரம் நடந்து சென்ற 2 பெண்களுக்கு இடையில் இருந்த குறுகிய இடைவெளிக்குள் லாரி டயர் பறந்து சென்றது... சாலையோரம் அமர்ந்திருந்த நபர் சுதாரித்துக் கொண்டு ஓடியதால் உயிர் தப்பினார்... டயர் விழுந்ததில் 3 பைக்குகள் சேதம் அடைந்தன... வெகு சில நொடிகளுக்குள் நிகழ்ந்த இச்சம்பவத்தால் நல்வாய்ப்பாக உயிர் சேதம் எதுவும் ஏற்படாத நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்