அசந்த நேரத்தில் நகைகளை மறைத்து வைத்து போலீசிடமே நாடகமாடிய பெண்

Update: 2023-10-09 08:06 GMT

மன்னார்குடி அருகே நெடுவாக்கோட்டையை சேர்ந்தவர் லாவண்யா. இவர் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி குடும்பத்தினருடன் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய போது, வீட்டிலிருந்த 75 சவரன் நகைகள் திருடு போனதாக போலீசில் புகாரளித்தார். உடனே, வழக்குபதிவு செய்த போலீசார், மூவரை கைது செய்து விசாரணை நடத்தியதில், மூவரும் 2 சவரன் நகைகளை மட்டுமே திருடியதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். இதனால், மீதமுள்ள 73 சவரன் நகைகளின் நிலை குறித்து குழம்பி போன போலீசார், புகாரளித்த லாவண்யாவையே பிடித்து விசாரணை நடத்தியிருக்கின்றனர். விசாரணையில், இரண்டு சவரன் நகைகள் மட்டுமே திருடு போனதும், மீதமுள்ள 73 சவரன் நகைகளையும் மறைத்து வைத்து விட்டு திருடு போனதாக லாவண்யா நாடகமாடியது தெரியவர, அவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்