ஸ்லோ மோஷனில் என்ட்ரி கொடுத்த புலி... தெறித்து ஓடிய மக்கள் | Tiger | Thanthi TV

Update: 2024-02-28 03:24 GMT

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் மிளகு தோட்டத்தில் உலா வந்த புலியை கண்டு அங்கிருந்த தோட்ட தொழிலாளர்கள் அச்சம் அடைந்தனர். சுல்தான் பத்தேரியில் உள்ள மிளகு தோட்டத்தில், சுமார்12 தொழிலாளர்கள் மிளகு பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். மரத்தின் மீது ஏறி தொழிலாளர் ஒருவர் மிளகு பறித்து கொண்டிருந்த போது, திடீரென புலி வருவதை கண்டு அங்கிருந்தவர்கள் சத்தம் எழுப்பினர். இதனையடுத்து புலி வனப்பகுதிக்குள் சென்றது.

Tags:    

மேலும் செய்திகள்