பாதியில் நிறுத்தப்பட்ட தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்... தவித்த பயணிகள்... நண்பனாக ஓடி உதவிய போலீசார்

Update: 2023-12-05 15:56 GMT

டெல்லியிலிருந்து வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் அரக்கோணத்தில் நிறுத்தப்பட்டு பயணிகள் மாற்று ரயில் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர் மழை காரணமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தண்ணீர் தேங்கியுள்ளதால், அதை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனால் டெல்லியில் இருந்து புறப்பட்ட தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் அரக்கோணத்தில் நிறுத்தப்பட்டது. அதில் வந்த பயணிகள் சென்னை கடற்கரை வரை செல்ல மின்சார ரயில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து பயணிகள் தங்கள் உடமைகளுடன் போலீசார் உதவியுடன் மாற்று ஏற்பாடு ரயிலில் ஏறி சென்னைக்கு புறப்பட்டு சென்றனர். இதனால் சிரமத்திற்கு ஆளானதாகவும் பயணிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்