மது போதைக்கு அடிமையான மகன்..தாயின் கழுத்தை துடிக்க துடிக்க நெறித்து கொன்ற கொடூரன்

Update: 2024-02-28 03:56 GMT

பண்ருட்டி அடுத்துள்ள மேல் அருங்குணம் கிராமத்தை சேர்ந்த மணிவாசகம் என்பவர், மதுபோதைக்கு அடிமையான நிலையில், தனது பெற்றோரிடம் அடிக்கடி மது அருந்த பணம் கேட்டு தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதேபோல் சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில், 52 வயதான தன் தாய் முத்துலட்சுமியை மணிவாசகம் கழுத்தை நெரித்து கொன்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பெண்ணின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவரின் மகனை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்