கோவில் கலசத்தில் சுற்றிக்கொண்ட பாம்பு..! - அரிய காட்சியை மெய் சிலிர்த்து பார்த்த கிராம மக்கள்

கோவில் கலசத்தில் சுற்றிக்கொண்ட பாம்பு..! - அரிய காட்சியை மெய் சிலிர்த்து பார்த்த கிராம மக்கள்

Update: 2022-07-16 15:24 GMT

மணப்பாறை அருகே விநாயகர் கோவில் கலசத்தை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பாம்பு சுற்றியிருந்த காட்சியை கிராம மக்கள் ஒன்று கூடி வேடிக்கை பார்த்தனர். திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்தஇடையபட்டியான்பட்டியில் வலம்புரி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்குள் புகுந்த 8 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று, கோவில் கலசத்தில் ஏறி சுற்றிக்கொண்டது. இதனை கிராம மக்கள் ஒன்று திரண்டு வேடிக்கை பார்த்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், மற்றும் தீயணைப்புத்துறையினர் பாம்பை பிடித்து காட்டு பகுதிக்குள் விடுவித்தனர்.

கோவில் கலசத்தில் சுற்றிக்கொண்ட பாம்பு..! - அரிய காட்சியை மெய் சிலிர்த்து பார்த்த கிராம மக்கள்

Tags:    

மேலும் செய்திகள்