கிணற்றுக்குள் விழுந்த விவசாயி..60 அடி ஆழத்தில் திக் திக்-நல்லது நினைத்து சென்றவர்களுக்கு நேர்ந்த கதி

Update: 2023-12-15 14:57 GMT

ஒட்டன்சத்திரம் அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த விவசாயியை மீட்க சென்ற மேலும் 2 பேர் கிணற்றுக்குள் சிக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள பொருளூரை சேர்ந்த கவுண்டப்பன் என்ற விவசாயி, தான் வளர்த்து வரும் ஆடுகளுக்கு தீவனம் பறிக்க சென்றபோது 60 அடி கிணற்றுக்குள் தவறி விழுந்தார். இவரது அலறல் சத்தம் கேட்டு அவரை மீட்க சென்ற முருகன் மற்றும் விஜய் ஆகியோரும் வெளியே வர முடியாமல் தவித்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர் கயிறு கட்டி 3 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்