டெல்டா விவசாயிகளுக்கு முதலமைச்சர் வேண்டுகோள்

Update: 2024-02-04 02:42 GMT

கடந்த சில நாட்களாக டெல்டா மாவட்ட குடிநீர் தேவைக்கு மட்டும் மேட்டூர் அணையிலிருந்து 600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் சாகுபடிக்கு போதிய தண்ணீர் கிடைக்கவில்லை என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, முதலமைச்சர் ஸ்டாலின் மேட்டூர் அணையிலிருந்து 6 ஆயிரம் கன அடி கூடுதலாக தண்ணீர் திறக்க உத்தரவிட்டார். அதன்படி, மேட்டூர் அணையில் இருந்து 6 ஆயிரத்து 600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நீரை விவசாயிகள் சிக்கனமாக பயன்படுத்தி சாகுபடி செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து 6 ஆயிரத்து 600 கன அடி தண்ணீர் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்