மக்களே உஷார்... உஷார்! - மேலும் 3 பேருக்கு வெஸ்ட் நைல் காய்ச்சல் - பாதிப்பு எண்ணிக்கை 7 ஆக உயர்வு

Update: 2024-05-10 02:25 GMT

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் மேலும் 3 பேருக்கு வெஸ்ட் நைல் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கோழிக்கோடு, மலப்புறம் மாவட்டங்களை சேர்ந்த10 பேர் வெஸ்ட் நைல் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில், 4 பேர் குணமடைந்த நிலையில் வீடு திரும்பினர். முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், கோழிக்கோட்டில் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள மேலும் 3 பேருக்கு வெஸ்ட் நைல் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கோழிக்கோட்டில் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 4 பேருக்கு வெஸ்ட் நைல் பாதிப்பு தொடர்பான சந்தேகம் எழுந்த நிலையில், ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனே தேசிய தொற்றியல் ஆய்வு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்