நண்பர்களோடு சேர்ந்து மாமனாருக்கு ஸ்கெட்ச் போட்ட மருமகன்... விசாரணையில் வெளிவந்த பகிர்

Update: 2024-05-10 12:47 GMT

பூலக்காடு பகுதியினை சேர்ந்த கூலி தொழிலாளி ரவி, காவிரி ஆற்றுப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, ரவியின் இளைய மருமகனான பூபதி அவரது நண்பர்கள் மாரியப்பன், கிருஷ்ணன், விக்னேஷ் ஆகியோர் இணைந்து ரவியை கொலை செய்தது தெரியவந்தது. பூபதிக்கும் அவரது மனைவி வளர்மதிக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்படும் நிலையில், மாமனார் ரவிதான் மனைவியுடன் இணைந்து வாழ தடையாக இருப்பதாக பூபதி நினைத்துள்ளார். தொடர்ந்து ரவியை ஆற்றுப் பகுதிக்கு அழைத்துச் சென்று மது ஊற்றிக் கொடுத்து துண்டால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரையும் போலீசார் கைது செய்துள்ள நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்