வேங்கை வயல் விவகாரம் தொடர்பான வழக்கு.. உயர்நீதிமன்றத்தில் காவல்துறை கொடுத்த தகவல்

Update: 2024-04-17 07:30 GMT

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பஞ்சாயத்திற்குட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் வசிக்கும் பட்டியலின மக்களுக்கான மேல்நிலை குடிநீர் தொட்டியில் அசுத்தம் செய்த விவகாரம் தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி ராஜ்கமல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக ஒருநபர் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டது. அதன் இடைக்கால அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது விசாரணை எப்போது முடிக்கப்படும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதுவரை, 337 சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மூன்று மாதங்களில் வழக்கின் விசாரணை முடிக்கப்படும் எனவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதிகள் வழக்கின் விசாரணையை ஜூலை 3ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்