ஆளுநருக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் - மதுரையில் பரபரப்பு

Update: 2024-02-14 02:08 GMT

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கண்டனம் தெரிவித்து திமுக இளைஞரணி சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதத்தை ஆளுநர் அவமதித்ததாக போஸ்டர்களில் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. திருப்பரங்குன்றம், திருநகர், அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆளுநரைக் கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்