மணல் கடத்தலில் நடந்த மர்ம சம்பவம் - கடத்தலில் ஈடுபட்ட ஜேசிபி எரிப்பு...

Update: 2024-05-10 06:27 GMT

காஞ்சிபுரம் மாவட்டம் ஆற்று படுகை, மற்றும் ஏரிகளில் மணல் அல்ல கடந்த எட்டு ஆண்டு காலமாக தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மர்ம நபர்கள் சிலர் அவ்வப்போது மணல் திருட்டில் ஈடுபடுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வந்தது. இது போன்ற குற்றச்சம்பவங்கள் தொடர்கதையாகி உள்ள நிலையில், பிள்ளைப்பாக்கம் கடுவஞ்சேரி பகுதியில் இரண்டு ஜேசிபி லாரிகள் மர்மமான முறையில் தீயிட்டு எரிந்தது. இதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். உரிய நடவடிக்கை இல்லாத நிலையில், உயர் காவல் அதிகாரியே வாகனத்தை தீயிட்டு கொழுத்தியதாக வதந்தி பரவத்துவங்கியது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை உண்மையை விளக்குமா? மணல் கடத்தல் நடந்ததா ? என பல கேள்விகளை அப்பகுதி மக்கள் முன்வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்