ஒரே பிடியில் இத்தனையாயிரம் கிலோ போதைப்பொருளா..! - அதிகாரிகளை அதிர வைத்த சம்பவம்

Update: 2024-03-22 13:02 GMT

பிரேசில் நாட்டில் இருந்து கப்பல் மூலம் விசாகப்பட்டினம் துறைமுகத்திற்கு கடத்திவரப்பட்ட 25 ஆயிரம் கிலோ போதைப்பொருளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விசாகப்பட்டினம் சிபிஐ அதிகாரிகளுக்கு, இன்டர்போல் மூலம் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உலர் ஈஸ்ட்டுடன் கலக்கப்பட்ட போதைப்பொருள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டு இருப்பது தெரியவந்தது. கண்டெய்னர் லாரியை பறிமுதல் செய்த போலீசார், போதைப்பொருளை அனுப்பிய நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்