`ஒரு நியாயம் வேணாமா?' இரு சக்கர வாகனத்தில் இனி சீட் பெல்ட்-க்கு எங்க போறது?

Update: 2024-05-10 02:27 GMT

சென்னையில் இரு சக்கர வாகனம் வைத்திருக்கும் நபருக்கு காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றதாக ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாம் தமிழர் கட்சியின் தலைமை நிலைய செயலாளராக பணியாற்றி வரும் செந்தில்குமாரின் செல்போனுக்கு, கார் சீட் பெல்ட் அணியவில்லை என கூறி, சென்னை போக்குவரத்து போலீசார் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து செலான் அனுப்பியதாக தெரிகிறது. இது குறித்து போக்குவரத்து போலீசாரிடம் அவர் கேட்ட போது, தவறு நடந்து விட்டதாகவும், அதனை சரிசெய்து விடுவதாகவும் அவர்கள் தெரிவித்ததாக கூறினார்..

Tags:    

மேலும் செய்திகள்