ஒரு நுங்கால் வெடித்த பயங்கரம் - கணவன் செய்த வெறி செயல் - மனைவி,மகளுக்கு நேர்ந்த கொடூரம்

Update: 2024-05-10 13:20 GMT

தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த கோபாலபுரம் கூட்டுறவு சர்க்கரை ஆலை அருகே லாஇ ஓட்டுநர் தனசேகரன் - யாசினி தம்பதி மகள்களான சாந்தினி, ஷபானாயுடன் வசித்து வந்தனர்... ஏற்கனவே திருமணமான நிலையில் தன்சேகரன் யாசினியை திருமணம் செய்து கொண்டு 15 வருடங்களாக தனியாக வசித்து வந்துள்ளார்... வெயிலின் தாக்கத்தால் யாசினி வெளியில் சென்று நுங்கு வாங்கி வந்த நிலையில், அதிகளவு நுங்கு ஏன் வாங்கி வந்தாய் எனக்கூறி தகராறு செய்த தனசேகரன், போதையில் திடீரென மனைவி யாசினியை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். தடுக்க முயன்ற மகள் சாந்தினியையும் தனசேகரன் கத்தியால் கடுமையாகக் குத்தியுள்ளார்... ரத்த வெள்ளத்தில் யாசினியும் சாந்தினியும் உயிருக்குப் போராடிய நிலையில் அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், தனசேகரனைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்