சட்டசபையில் ஆளுநர் வெளியேறிய விவகாரம் - அரசியல் தலைவர்கள் கூறிய பரபரப்பு கருத்து

Update: 2024-02-13 05:00 GMT

சட்டசபையில் நடந்த நிகழ்வு முற்றிலும் வெட்கக்கேடானது எனவும், தமிழக ஆளுநரை சபாநாயகர் மிரட்டுகிறாரா? எனவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், சட்டசபையில் சபாநாயகர் அப்பாவு பேச்சு ஆச்சர்யமளிக்கிறது என்று கூறியுள்ளார். தி.மு.க. உறுப்பினர் கூட பேச, ஒரு முறைக்கு இரு முறை சிந்திக்கும் வார்த்தைகளை சபாநாயகர் அப்பாவு பேசி உள்ளதாக தெரிவித்துள்ளார். சபாநாயகரின் மொழி பிரயோகம் காரணமாக, அந்த வீடியோவை தற்போது தமிழ்நாடு செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை பொது தளத்தில் இருந்து நீக்கி உள்ளது என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்