மலேசியாவிலிருந்து கடத்திவரப்பட்ட அபூர்வ உயிரினம்... சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு

Update: 2024-03-28 07:07 GMT

சென்னை விமான நிலையத்தில், மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 4 அபூர்வ வகை கிளிகளை சுங்கத்துறை அதிகாரிகள் மீட்டெடுத்தனர். சென்னையை சேர்ந்த முகமது ராஜா மற்றும் ரமீஷ் ராஜா ஆகிய இருவரும், கக்காட்டூஸ் என்ற அரிய வகையை கிளிகளை முறையான அனுமதியின்றி கடத்தி வந்தது தெரியவர, இருவரிடமிருந்தும் கிளிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், மத்திய வன உயிரின பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். குளிர்பிரதேசங்களில் மட்டுமே வாழும் இந்த வகை கிளிகளை மலேசியாவுக்கே திருப்பி அனுப்ப முடிவே செய்த அதிகாரிகள், அதற்கான செலவை அபராதத்துடன் சேர்த்து கிளிகளை கடத்தி வந்தவர்களிடமே பெற முடிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்