வாக்களிக்க லண்டனில் இருந்து தஞ்சைக்கு பறந்து வந்த இளைஞர்

Update: 2024-04-18 11:44 GMT

உள்ளூரில் இருந்து கொண்டே ஒரு சிலர் ஓட்டுப் போட சோம்பேறித் தனம் படும் நிலையில் ஜனநாயகக் கடமையை ஆற்ற பொறுப்புணர்வுடன் லண்டனில் இருந்து சொந்த ஊர் வந்துள்ளார் ஆடுதுறை பகுதியை சேர்ந்த முகமது முஸ்தாக். இவர் கடந்த 2021 முதல் லண்டனில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக சொந்த ஊர் வருகை தந்துள்ள முகமது முஸ்தாக், சமூக வலைதளங்களில் மட்டும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு நின்று விடாமல் செயலிலும் அதைக் காட்ட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்