துக்க வீட்டில் நடந்த விபரீதம்-நள்ளிரவில் கேட்ட பயங்கர சத்தம் - திண்டுக்கல்லில் பரபரப்பு

Update: 2023-10-10 12:12 GMT

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே துக்க நிகழ்விற்காக வந்திருந்த மூன்று பேர், செல்போன் வெடித்ததில் தீக்காயம் அடைந்தனர்...

இழந்தாரியூர் கிராமத்தில் மயில்சாமி எனபவர் வீட்டில் துக்க நிகழ்வில் கலந்து கொள்வதற்காக பழனிச்சாமி, வேலுச்சாமி, சந்துரு ஆகிய மூன்று பேர் வந்திருந்தனர். இதைத் தொடர்ந்து, இரவு நேரத்தில் செல்போனை சார்ஜரில் போட்டு விட்டு மூன்று பேரும் உறங்கச் சென்ற நிலையில், எதிர்பாராத விதமாக செல்போன் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் மூன்று பேரும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்